தருமபுரி, நவ.26- அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், பெண்களுக்கு எதிரான மநு ஸ்மிருதியை ஒழிப்போம் என்கிற உறுதிமொழியேற்பு நிகழ்வு மாதர் சங்கத்தின ரால் நடத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் தருமபுரி நகரகமிட்டி சார்பாக, பெண் களுக்கு எதிரான மநு ஸ்மிருதியை ஓழிப் போம். பெண்களை பாதுகாக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மாதர் சங்க தருமபுரி நகர செயலாளர் நிர்மலா ராணி தலைமை வகித் தார். சிறுபான்மைநலக்குழு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கிரைஸாமேரி, மாதர் சங்க நகர தலைவர் ஒய்.சுபா, நிர்வாகிகள் கே.பூபதி,உமா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.