districts

img

தொழிலை பாதுகாக்க நடத்தும் போராட்டங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவோம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி.,

திருப்பூர், மே 10- ஜவுளித் தொழிலை, இதை நம்பியி ருக்கும் வேலை வாய்ப்பை பாதுகாப்பதற் காக நடத்தப்படும் எல்லாவித போராட்டங் களுக்கும் நாங்கள் முழுமையான ஆதரவு தருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஞாயிறன்று ஜவுளி உற்பத்தியாளர் அமைப் புகள், இந்த மண்டலத்தைச் சேர்ந்த கோவை  பி.ஆர்.நடராஜன், திருப்பூர் கே.சுப்புராயன், பொள்ளாச்சி எஸ்.சண்முகசுந்தரம், ஈரோடு அ.கணேசமூர்த்தி, கரூர் ஜோதிமணி ஆகிய  ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து  கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது: திருப் பூர் நகரில் அனைவரும் இணைந்து நின்று தான் இந்த தொழிலை வளர்த்தனர். அந்த  ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். நாட் டின் பொருளாதாரத்துக்கு முக்கியமாக உதவி செய்யக்கூடிய ஒரு நகரம் திருப்பூர். இந்தியாவில் இளைஞர்கள் 54 சதவிகி தத்திற்கு மேல் இருக்கின்றனர். சீனாவை விட இளைஞர்கள் இங்கு அதிகம். அவர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, இங்கிருந்து மூலப்பொருளை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, உற்பத்தி செய்து முழுமையான பொருளை ஏற்றுமதி செய் யும் போதுதான் உள்நாட்டில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். ஆனால் இதைச் செய்யாமல் மூலப்பொருளை ஏற்று மதி செய்வதற்கு என்ன காரணம்? 

பருத்தி, நூல் உள்ளிட்ட மூலப்பொருட் கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் பருத்தி, நூலைக் கொண்டு வர வேண்டும்.  இந்த பொருட்களை அத்தியாவசியப் பொருட் கள் பட்டியலில் இருந்து நீக்கும் போதே நாங் கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். நூற்பாலைகள் கிலோவுக்கு ரூ.40 விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். இது மில் முதலா ளிகளுக்கு எதிரானது அல்ல. மில் முதலா ளிகளும், பின்னலாடை உற்பத்தியாளர் களும் ஒருவரையொருவர் சார்ந்திருப்ப தால் தான் இந்த விலை குறைப்பைக் கேட்கி றோம். தற்போதுள்ள நெருக்கடியை உணர்ந்து கொண்டு நூல் விலை உயர்வை  நூற்பாலைகள் திரும்பப் பெற வேண்டும்.

கொரோனா காலத்தில் நீண்ட நாட்கள் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருந் தது. அதையெல்லாம் தாண்டி மீண்டு பின்ன லாடை தொழில் வந்துள்ளது. ஆனால் தற் போது பல முனைகளில் வரும் தாக்குதல் களை இந்த தொழில் துறையினர் தாக்குப்  பிடிக்க முடியவில்லை. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் விவசாய சட்டத்தை எதிர்த்த போதும், விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் தான் வெற்றி கரமாக கோரிக்கையை நிறைவேற்ற முடிந் தது. எனவே கோரிக்கைக்காக தொடர்ந்து நடத்தும் போராட்டம் அரசுக்கு எதிரான தல்ல. தொழில் துறை வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக போராடுவது அரசுக்கு எதிரானதென்று நினைக்க வேண்டியதல்ல. வாழ்வாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண் டும். மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில்லை என்பதை போல, தொழில் துறை சும்மா இருந்தாலும், நெருக்கடி தொழில் துறையை சும்மாவிடவில்லை. நெருக்கடிக்கு எதிராகப் போராடத் தூண்டு கிறது. எனவே அரசின் கவனத்தை ஈர்ப்ப தற்கு நடத்தக்கூடிய எல்லாவிதமான போராட் டங்களுக்கும் ஆதரவு தருவோம். தொழி லைப் பாதுகாக்க, வேலை வாய்ப்பைப் பாதுகாக்க, திருப்பூரைப் பாதுகாக்க என தொழில் துறையினர் நடத்தக்கூடிய எல்லா  போராட்டங்களுக்கும் ஆதரவு தருவோம். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளி யேயும் இந்த போராட்டத்துக்கு முழு ஒத்து ழைப்பு கொடுப்போம். இவ்வாறு பி.ஆர்.நட ராஜன் எம்.பி., பேசினார்.