districts

img

அழிந்து வரும் கைத்தறி நெசவுத்தொழிலை மீட்க வேண்டும்

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப் படை தேவைகள் என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடையாகும். இவை மூன்றும் பல் வேறு வகையில் பரிணாம மாற் றம் அடைந்துள்ளன. குறிப்பாக, ஆடைகள் பல்வேறு மாநில கலாச் சாரங்களை உள்வாங்கி பல்வேறு வடிவங்களில் விற்பனையாகி வரு கின்றன. இதனிடையே, நம் முன் னோர்களின் காலத்தில் தமிழர் களால் உருவாக்கபட்டது தான் கைத்தறி நெசவுத் தொழில். பாரம்ப ரியமாக முன்னோர்களின் உழைப் பாள் உருவான நெசவுத்தொழில் நலிந்து வருவது வேதனைக்கு ரியதாகும். நெசவு தொழிலின் மூலப்பொ ருள் பல நாடுகளில் இருந்து கொள் முதல் செய்யப்படுகிறது. பல முக வர்கள் கடந்து உற்பத்தியாளர் களை சென்றடைகிறது. மூலப் பொருளான மென்மையானபட்டு (Soft Silk) சீனாவிலிருந்து இறக் குமதி செய்யப்படுகிறது. இந்த  முறையே விலைவாசி உயர்வுக்கு  முக்கிய காரணமாகிறது. நெசவு தொழிலின் உற்பத்தி இரண்டு முறைகளில் நடைபெற்று வருகி றது. அதாவது, தனியார் மற்றும்  கூட்டுறவு தற்போது 25 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் செய் கிறது. 75 சதவிகிதம் தனியார் கொள் முதல் செய்கின்றனர். நெசவா ளர்களின் உற்பத்தியில் லாபத் தில் இருந்து மூன்று சதவீதம் அதிகமாக கிடைக்கும். சில சம யம் அதுவும் இல்லாமல் போகும்.  

இதுகுறித்து பட்டு நெசவாளர் ஜெயபாலன் என்பவர் கூறுகை யில், நான் 12 வயதில் இந்த தொழி லுக்கு வந்தேன். நாற்பது வருடம்  ஆகியுள்ளது. அப்போது இருந்த  செழிப்பு, இன்றைய கால கட்டத் தில் இல்லை. இந்த தொழிலில் நானும், என்னுடைய மனைவியும் இணைந்து பணியாற்றி வருகி றோம். நாங்கள் தயாரித்த சேலை கள் ஏஜென்டுகள் மூலம் முன்னணி  கடைகளுக்கு சென்று கொடுப் போம். மாதத்திற்கு பத்து சேலை கள் மட்டுமே தயாரிக்கின்றோம். முன்னர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்த நாங்கள், தற் போது 7 ஆயிரம் ரூபாய் கிடைப் பதே பெரும் பாடாக இருக்கிறது. நெசவுத்தொழில் கிடைக்கிற வரு வாயை வைத்து குடும்ப நடத்த முடி யவில்லை. என்னுடைய மகனின் வருவாயை வைத்துதான் வாழ்க் கையை நடத்தி வருகிறோம். இப் போதுள்ள சந்ததியினர் நெசவுத் தொழிலை கையில் எடுக்க முன்வர வில்லை. அனைத்திற்கும் காரணம்  மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் லாபம் இல்லாத துதான், என்றார். தற்போது, நெசவாளர்கள் தங் கள் தொழிலை மாற்றியும் மற்றும்  நெசவுத்தொழிலை தொழில்நுட் பம் சார்ந்தாக மாற்றியுள்ளனர். கைத்தறியால் இரண்டு நாட்க ளுக்கு ஒரு சேலையும் மற்றும் தொழில்நுட்ப கருவியால் நாள் ஒன்றிற்கு பத்து சேலையும் தயாரிக் கப்பட்டு வருகிறது. இத்தகைய காரணத்தால் சேலை உற்பத்தி யில் தொழிற்நுட்பத்தில் பலர் மாறுவதற்கு காரணமாக அமைந் தது வருகிறது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை இல்லை என்பதை ஒத்துக்கொள்” என்ற பொன்மொழி நெசவுத்தொழிலுக்கு இல்லையோ என்கிற நிலைதான் தற்போது உள் ளது. அழியும் தருவாயில் உள்ள நெசவு தொழிலை மீட்டெடுக்க ஆட்சியாளர்களின் பார்வை இதன் மீது திருப்ப வேண்டும் என்பதே இத்தொழிலை இன்னமும் நம்பி யுள்ள நெசவாளர்களின் நம் பிக்கை. -எம்.சுவேதா