திருப்பூர், ஜன.4 - இடுவாய் ஊராட்சியில் தெரு விளக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் பொய்யான குற்றச்சாட்டு கூறி, மலிவான அரசியல் நடத்து கிற நாம் தமிழர் கட்சியினருக்கு இடுவாய் ஊராட்சி மன்ற தலை வர் கே.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கே.கணேசன் கூறியதாவது, திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் தாந் தோணி அம்மன் நகர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி சார்பாக திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவரால் மின் விளக்கு அமைக்கப்பட்ட தாகவும், அந்தக் கம்பத்தையும், தெருவிளக்கையும் காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு மனு கொடுத்து இருப்பதாக பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன். நாம் தமிழர் கட்சி சார்பாக அப்பட்டமான ஒரு பொய்யை மாவட்ட ஆட்சியரிடம் மனு வாக அளித்து இருக்கிறார்கள். உண்மை என்னவெனில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியன்று பஞ்சாயத்து கூட் டத்தில் தாந்தோணி அம்மன் நகர் பகுதிக்கு தெரு விளக்கு போட தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சிகளில் மின்வாரியத் திற்கு அதிக பாக்கி வைத்திருக்கக் கூடிய பகுதிகளில் புதிய இணைப் புகள் வழங்க மின்வாரியம் மறுத்து வந்தது. அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு கண்ட பிறகு கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று பஞ்சா யத்து கூட்டத்தில் மீண்டும் கூடுதல் தெரு விளக்குகள் தாந்தோணி அம்மன் நகருக்கும், புதிய மின் விளக்குகள், சூரியநகர் பகுதிக்கும் போடுவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று மின் வாரியத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடிதம் தரப் பட்டது. புதிய விண்ணப்பம் போடு வதில் முன்பிருந்த பஞ்சாயத்து செயலர் கைபேசி எண் இருந்த தால், தாமதமானது. பிறகு புதிய செயலாளரின் கைபேசி எண் பதி யப்பட்டு விண்ணப்பம் போடப் பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு நேரில் சென்று தெரு விளக்குகள் போட தாமதமா னதற்கான காரணங்களை அந்தப் பகுதி மக்களிடம் நேரில் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி வந்தேன். கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று விண்ணப்பத்திற்கு உண் டான பணம் காசோலை மூலம் மின் வாரியத்திற்கு செலுத்தப்பட்டது. புதிய மின் கம்பமும், தெரு விளக்குகள் போட மதிப்பீட்டுத் தொகையை மின்வாரியம் தெரி வித்த உடன் அதற்குண்டான பணம் செலுத்தப்பட்டு மின் கம்பமும், மின் விளக்குகளும் சில தினங்களுக் குள் அமைக்கப்பட உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பொறுப் பாளர்கள் நேரில் வந்து எங்களை அணுகி இந்த தகவல்களை தெரிந்து கொண்டே, ஒரு மலிவான அரசியல் நோக்கத்தோடு ஊராட்சி சார்பாக மின்கம்பம், தெரு விளக்கு கள் போடுவதற்கு பணம் எடுக்கப் பட்டது. தெரு விளக்குகளும், மின் கம்பமும் போடவில்லை என்று தவறான, பொய்யான ஒரு தகவலை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்துள்ளனர். மேலும், உண்மைக்கு மாறாக செயல்பாடு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு, இடுவாய் ஊராட்சி நிர்வாகம் சார்பாகவும் ஊராட்சித் தலைவர் என்ற முறை யிலும் கடும் கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். மக்களின் பிரச்சனைகளை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப் படுத்தும் பொழுது பாராபட்சம் பாராமல் தன் அதிகாரத்துக்குட் பட்ட வகையில் வெளிப்படையாக அனைத்து வேலைகளும் செய்வ தற்கு நிர்வாகம் தயாராக உள்ளது. நேர்மையான, நியாயமான விமர்ச னங்களை ஊராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதோடு, அதை நிவர்த்தி செய்ய திறந்த மன தோடு செயல்படும். பொய்யான தகவலோடு சொல்லப்படும் குற்றச் சாட்டுகள் கடும் கண்டனத்துக்கு உட்பட்டவை என்பதை தெரிவித் துக் கொள்வதாக அவர் கூறியி ருக்கிறார்.