districts

img

இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு வருகிறோம்: பாமயன் பேச்சு

தருமபுரி, அக்.10- நாம் இயற்கையிலிருந்து தற் போது அந்நியப்பட்டு வருகிறோம்; இது சிக்கலானது, என சூழலியலா ளர் பாமயன் எச்சரிக்கை விடுத்துள் ளார். தருமபுரி புத்தகத் திருவிழா வில் புதனன்று நடைபெற்ற நிகழ்ச் சிக்கு, மாவட்ட வேளாண் அலுவலர் வி.குணசேகரன் தலைமை வைத் தார். ‘மண்ணில் தெரிகின்ற வானம்’ என்கிற தலைப்பில் சூழலியலாளர் பாமயன் பேசுகையில், புத்தகம் அனுபவங்களின் தொகுப்பாகும். தமிழ்ச் சமூகம் அறிவில் சிறந்தது. பண்டைய கால நாகரிகம் இயற்கை யோடு இயைந்த நாகரிகம். தமிழ்ச்  சமூகம் இயற்கையோடு வாழ்ந்த சமூகம் என்பதற்கு இலக்கியச் சான்று, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகும். இன் றைக்கு நாம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு வருகிறோம்; இது சிக்கலானது. உலக வளா்ச்சி என் பது சூழலியலோடு ஒட்டி இருக்க வேண்டும். அண்மைக் காலமாக உணவுப் பழக்க வழக்கம் மாறி வருகிறது. 95 சதவிகித குழந்தைகள் துரித உணவுகளை விரும்பி உட் கொள்கின்றனர். இதனால் உடல் பருமன், நீரழிவு உள்ளிட்ட தொற் றாத நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. மனிதர்க ளைத் தவிர வேறு எந்த உயிரின மும் சூழலை பாழ்படுத்துவ தில்லை. சூழலியலைப் பாது காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது. எனவே அனைவரும் சூழலியலைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவோம், என்றார். இந்நிகழ்ச்சியில், தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் இரா. சிசுபாலன், செயலாளர் இரா.செந் தில், தருமபுரி பண்பலை ஒளிபரப்பு அலுவலர் எஸ். கோபாலகிருஷ் ணன், உதவி பொறியாளர் கிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி பெ.துரை ராஜ் நன்றி கூறினார்.