districts

img

வயநாடு பேரிடர்: முன்னாள் வீரர்கள் நிதியுதவி!

கோவை, ஆக.18- வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் நோக்கில், சூலூர்  விமானப்படை முன்னாள் வீரர்கள் சங்கம் ரூ.75 ஆயிரத்தை வயநாடு விமானப்படை வீரர்கள் சங்கத்திடம் வழங்கியுள் ளது. கோவை மாவட்டம், சூலூர் அரிமா சங்க அலுவலக அரங்கில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் அப் துல் ஹக்கீம், பொதுச்செயலாளர் சோ. ரமேஷ்குமார், பொரு ளாளர் தேனப்பன் மற்றும் பிற நிர்வாகிகள் வயநாட்டில் ஏற் பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரண உதவி செய்யும் நோக்கில், ரூ.75 ஆயிரத்தை வயநாடு விமானப்படை வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் வழங்கினர். இந்நிகழ்வில், முன்னாள் விமானப்படை வீரர்கள்  சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் பேசுகையில், வய நாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் அனைவரும் உதவ வேண்டும். இந்த சிறிய உதவி, அவர்களுக்கு ஒரு  ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறேன், என்றார்.