districts

img

குடிநீர் தொட்டி ஆக்கிரமிப்பு மாதர் சங்கம், பொதுமக்கள் மனு

சேலம், ஆக.24- குடிநீர் தொட்டியை ஆக்கிரமித்து சிவன் சிலை அமைத்து  பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நபர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பொதுமக்கள், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள அச்சங்காடு பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகன், மனைவி  பூங்கொடி ஆகியோர், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது வான குடிநீர் தொட்டியை ஆக்கிரமிப்பு செய்து ஊருக்குள்  குடிநீர் வருவதை தடுத்துள்ளனர். இதுகுறித்து, சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல் லாத நிலையில், பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி  குடிநீர் தொட்டி உள்ள பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றினர். இதையடுத்து, பொதுமக்கள்  குடிநீர் தொட்டியை பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதிக்கு  பின்பு பூங்கொடி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோர்  புதிதாக ஒரு சிவன் (லிங்கம்) சிலையை குடிநீர் தொட்டியின்  அருகில் வைத்து, அரை நிர்வாணமாக பூஜை செய்து வரு கிறார்.  மேலும், இப்பகுதியில் யாரும் குடிநீர் பிடிக்க வரக் கூடாது. மீறி வந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப் பேன் என மிரட்டியுள்ளார்.  இதனையடுத்து, குடிநீர் குழாய் அருகில் புதிதாக முளைத்த சிவன் சிலையை அகற்ற வேண்டும். குடிநீர் தொட்டி  பகுதியை ஆக்கிரமித்துள்ள முருகன் மற்றும் அவரது மனைவி பூங்கொடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்கத் தின் தலைமையில் பொதுமக்கள் புகார் மனுவை அளித் தனர்.  முன்னதாக இவ்வியக்கத்தில், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி உள்ளிட்ட  தலைவர்கள் பங்கேற்றனர்.