உடுமலை, டிச. 28 - உடுமலைபேட்டை திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந் துவிடப்பட்டது. பிஏபி பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 3.77 லட் சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன், உடு மலை நகராட்சி, உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் ஒன்றிய பகு திகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்க ளும் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இரண்டாம் மண்டல பாசனத் திற்கு உட்பட்ட 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஆக.,26 இல் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு சுற்றுகள் நீர் வழங்கப்பட்டு டிச.20 ஆம் தேதி பாசன காலம் நிறைவு பெற் றது. இதையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக் கையை ஏற்று திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்வ கையில் புதன்கிழமை முதல் 120 நாட் களுக்கு குறிப்பிட்ட இடைவெளி யில், நான்கு சுற்றுகளாக 7 ஆயிரத்து 600 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, மாவட்ட ஆட் சியர் வினீத் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாநில அமைச் சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். திருமூர்த்தி அணையில், மொத்தம் 60 அடியில், தற்போது 49.44 அடி தண்ணீர் உள் ளது. அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 148 கன அடியாக உள்ளது. இதில் கண்காணிப்பு பொறியா ளர் தேவராஜன், கோட்ட செயற் பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவி பொறியாளர் மாரிமுத்து உள் ளிட்ட பொதுப்பணித் துறை அதிகா ரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.