திருப்பூர், டிச.26- பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) முதலாவது மண் டல பாசன பகுதிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து ஞாயிறன்று தண் ணீர் திறந்து விடப்பட்டது. மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர். இதன் மூலம் 94 ஆயிரத்து 521 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும். மே 9ஆம் தேதி வரை ஐந்து சுற்றுகளாக இடைவெளி விட்டு மொத்தம் 135 நாட்களுக்கு தண் ணீர் திறந்து விடப்படும். திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற் றப்படும். இது படிப்படியாக உயர்த்தப் பட்டு கால்வாயின் முழு கொள்ளள வான 912 கனஅடி/வினாடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய வட்டங்களில் விவசாய நிலங்களும், கோவை மாவட் டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களும் ஆக மொத்தம் 94 ஆயி ரத்து 521 ஏக்கர் பாசன நீர் பெற்று பயனடையும் என்று பிஏபி நிர்வாகம் கூறியுள்ளது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியா ளர் தேவராஜ், செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துறை, விவசாய சங்க பிரதி நிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.