districts

உடுமலை அமராவதி அணைக்கு நீர் வரத்து குறைந்தது

உடுமலை, பிப்.25-  உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  உடுமலை, அமராவதி அணையின் மூலம்  பழைய ஆய்க்கட்டு பாசனம் புதிய ஆயக் கட்டு பாசனத்தில் 55 ஆயிரம் ஏக்கருக்கு மேல்  நேரடியாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றன. மேலும் இதுபோக வழியோர கிராமங்களான கல்லாபுரம், கொழுமம் ருத்திரபாளையம் காரத்தொழுவு உட்பட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் பயன்பட்டு வரு கின்றன.  இந்நிலையில், கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது அணை மூன்று முறை நிரம்பியதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அணைக்கு  நீர்வரத்து  தினமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம்  இருந்ததால் உபரி நீர் பல நாட்களாக வெளி யேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பொழிவு இல்லாத காரணத்தால் அமராவதி  அணைக்கு நீர்வரத்து 17 கன அடியாக தற் சமயம் குறைந்துள்ளது. பழைய மற்றும் புதிய  ஆயக்கட்டு  கட்டு பாசனத்தில் நெற்பயிர் களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் வரும் 28ஆம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு  அரசாணைப்படி தண்ணீர் தற்பொழுது  பாசனத்துக்கு சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தற்பொழுது  வழங்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. மூன்று மாதத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில்,  தற்பொழுது அமராவதி  அணைக்கு நீர்வரத்து  வெகுவாக குறைந்துள்ள காரணத்தால், அமராவதி அணை பழைய மற்றும் புதிய  ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது பாசன பகுதி களில் நெற்பயிர்கள் கரும்பு அதிகளவு சாகு படி செய்யப்பட்டுள்ள நிலையில், தண்ணீர்  இல்லாமல் பயிர்கள் கருகும் அபாயத்தில்  உள்ளதாக விவசாயிகள் அச்சமடைந் துள்ளனர். அமராவதி அணையின் மொத்த 90  அடியில் தற்பொழுது 58.3 அடியாகவும் நீர் வரத்து 17 அடியாகவும் பாசனத்திற்கு 800 கன  அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.