ஈரோடு, மார்ச் 5- அட்டவணைப்படி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். கீழ்பவானி பாசனத்தில் இரண்டாவது மண்டலப் பாசன புன்செய் பயிர்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அரசாணைப்படி ஐந்து நனைப் புகளாக இடைவிட்டு தண்ணீர் வழங்கப்பட வேண்டும். எதிர் பார்த்த மழை பொழிவு இல்லாத காரணத்தினால், அணை யின் நீர் இருப்பு தற்போது கவலை தரும் நிலைக்கு சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டுள்ள பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது குறித்து முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கீழ்பவானி பாசன செயற்பொறியாளர் திருமூர்த்தி கூட்டி னார். இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில், எக்கார ணம் கொண்டும் மூன்றாவது நனைப்பிற்கும், நான்காவது நனைப்பிற்கும் கொடுக்கப்படும் 13 நாட்கள் தண்ணீர் என்பதை குறைத்து விடக்கூடாது என்ற கோரிக்கை முதன் மையாக வைக்கப்பட்டது. தண்ணீர் விடும் நாட்களின் அளவு குறைக்கப்பட்டால் அறு வடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிற எள், நிலக்கடலை மற்றும் இதர புஞ்சைப் பயிர்கள் காய்ந்து மிகப்பெரிய நட்டம் ஏற்படும். எனவே மூன்றாவது, நான்காவது நனைப்புக ளுக்கான தண்ணீரை அட்டவணைப்படி விட வேண்டும். ஐந்தாவது நனைப்புக்குத் தேவையான தண்ணீரை முன் அணைகளில் இருந்து கேட்டுப் பெற்று வழங்க வேண்டும் என்றும் கோரி வைத்து மனு கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயி கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இராமசாமி, இரா.ஈஸ்வர மூர்த்தி, செங்கோட்டு வேலுமணி மற்றும் கீழ் பவானி ஆயக் கட்டு நில உரிமையாளர்கள் சங்க எஸ்.பெரியசாமி, கி.வே. பொன்னையன் உள்ளிட்ட பல்வேறு பாசன சபையின் தலை வர்களும் கலந்து கொண்டனர்.