districts

img

குடியிருப்புக்குள் நுழையும் தண்ணீர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த அரூர் நகர் மக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 28-   மழை காலங்களில் அரூர் ராஜ கால் வாயில் மழை நீர் வெளியேற வழியின்றி அரூர் பேரூராட்சி குடியிருப்பு பகுதிக ளில் தேங்கி நிற்கிறது, இதற்கு  நிரந்தர தீர்வு காணவேண்டும் என மாவட்ட நிர் வாகத்தை அரூர் நகர மக்கள் வலியுறுத் தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி முழுமையாக தண்ணீர் நிரம்பும் பொழுது ஏரி கரை உடையாமல் இருக்க 3 வழிகளில் உபரி நீர் வெளியே றும் வகையில் இந்த ஏரி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த நகரில் உள்ள முக்கிய வீதிகளின் சாக்கடை கழிவுநீரும், மழைக்காலத் தில் நகர பகுதியில் மழைநீர் தேங்கா மல் இருக்கவும், ஏரியின் உபரி நீரும் இணைந்து வெளியேற சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலான தொலைவில் ராஜ கால்வாய் 7 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால் வாய் மூலம் வெளியேறும் உபரி நீர் வாணியாற்றில் கலக்கும் வகையில் அமைந்துள்ளது. 

நகரத்தில் உள்ள சாக்கடை நீர், மழை நீர், ஏரி உபரி நீர் அனைத்தும் இணைந்து வெளியேறும் பொழுது நக ரில் தண்ணீர் தேங்கி நிற்காமல், கொசு  உற்பத்தி ஆகாத வகையில் இருந்தது.  ஆனால், தற்பொழுது சில நபர்களால்  இந்த கால்வாய் பகுதி ஆக்கிரமிக்கப் பட்டு, பட்டா நிலமாக மாறியுள்ளது. இதனால், உபரி நீர் வெளியேற முடி யாமல், ராஜ கால்வாயிலிருந்து வெளி யேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதி யில் நுழைந்து விடுகிறது. எனவே, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, கால் வாய்யை அகலப்படுத்தி சீரமைத்து  நிரந்தர தீர்வு காண வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.