கோவை, மார்ச் 13- உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்கள் (சிஐடியு) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி குடிநீர் வடிகால் வாரியத் தின் ஒப்பந்த ஊழியர்க ளுக்கு முறையான சம்ப ளத்தை வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும். சட்டப்ப டியான இ.எஸ்.ஐ, பி.எப், குரூப் இன்சூரன்ஸ் ஆகி யவை வழங்க வேண்டும். பராமரிப்பு பணியில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலன் சார்ந்த விவகாரங்க ளில் நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் உடனடியாக அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி குடி நீர் வடிகால் வாரிய ஊழியர் கள் (சிஐடியு) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தணிக்கை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு, அ. பிரான் சிஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மற் றும் நீலகிரி மாவட்டச் செய லாளர் ஆர்.சரவணன், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ். சி. பிரகாசம், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டச் செய லாளர் ஏ.உமாசங்கர், கரூர் மாவட்டச் செயலாளர் ஆர். அரவிந்த் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.