மேட்டுப்பாளையம், ஜூலை 26- தொடர் மழை காரணமாக பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப் பட்டது. தற்போது நீலகிரியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வா யன்று காலை 11 மணிக்கு அணைக்கு விநா டிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 96 அடியாக உயர்ந்தது. நீலகிரியில் மழை அளவு குறைந்ததால், மதியத்திற்கு மேல் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந் தது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந் தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டத்தை ஒரே சீராக வைத்திருக்க, அணையிலிருந்து விநா டிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் போது, அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகு களில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் பவானியாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை காணப் படுகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில், மேட் டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீல கிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. அணையில் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்குவதால், அணையிலி ருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள் ளது. எனவே தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறு முகை, பெத்திக்குட்டை மற்றும் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, தாழ்வான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பவானியாற்றின் கரை யோரப் பகுதியில் வருவாய் துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.