districts

ஆபத்தை ஏற்படுத்தும் ஆழ்துளை கிணறுகள் எச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

திருப்பூர், ஆக. 12- ஆபத்தை ஏற்படுத்தும் வகை யில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமான குழிகள் அரு கில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ள  உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளதாவது: மாவட்டங்களில் திறந்த  வெளிகிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங் கள் மற்றும் குவாரி குழிகள் ஆகி யவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பி டத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்து கிறது. மேலும், உயிரிழப்புகள் ஏற்படவும் காரணமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ள தலை மைச்செயலாளர், மாவட்ட ஆட்சி யர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கைவிடப் பட்ட குவாரி குழிகள், திறந்த வெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய  விரிவான கணக்கெடுப்பு நடத் தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், திறந்த  வெளிகிணறுகள் மற்றும் செய லிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் இது தொடர்பான விரிவான  அறிக்கையை தயாரிக்க வேண்டும்  என அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி, நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி  ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதி களில் சாத்தியமான அபாயங் களைக் குறைக்க, அனைத்து திறந்த வெளிகிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறு களையும் திறம்பட பாதுகாப்பது அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில்  ஒவ்வொரு திறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதி யானசுவர்கள் அமைக்கப்பட்டி ருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், செயலிழந்த ஆழ் துளை கிணறுகள், குறிப்பாக குழந் தைகளுக்கு ஆபத்தை விளை விக்கக் கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவைகளைக் கண்டறிந்து உடனடியாக மூடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கைவிடப்பட்ட குவாரி  குழிகளால் ஏற்படும் அபாயங் களைக் கருத்தில் கொண்டு இளை ஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கையாக கைவி டப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி  உடனடியாக பாதுகாப்பு வேலிகள்  அமைக்க குவாரிகளின் குத்தகை தாரர்களுக்கு அறிவுறுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதேபோன்று சாலை யைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில், கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளை  வலுவான தடுப்புகளை அமைத் திடவும், அவை ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப் படுத்த தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேற்கண்ட அபாய கரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்தி டவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.