திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்குட்பட்ட 10 ஆவது வார்டு ரத்தினபுரி நகர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம், பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில் பல மாதங்களாக காட்சி பொருளாகவே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.