districts

img

தேங்காய் உறிக்கும் தொழிலாளர் நலன் காக்க நடைபயணம்

உடுமலை, ஜன.6-  ஜனவரி 25 ஆம் தேதி, தேங்காய் உறிக்கும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், உடுமலை மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து நடை பயணமாக  சென்று வருவாய்க் கோட்டாட்சிய ரைச் சந்தித்து மனு கொடுப்பது என  சிஐடியு  பேரவை கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் தர்மன் தலைமையில் 5 ஆம் தேதி வியா ழக்கிழமை கொங்கு திருமண மண்ட பத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற  இந்த கூட்டத்தில், தேங்காய் உரிக் கும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச் சனைகள் குறித்து விவாதிக்கப்பட் டது.  ஜனவரி 25 ஆம் தேதி உடுமலை  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நடை பயணமாக சென்று வரு வாய்க் கோட்டாட்சியரைச் சந்தித்து  மனு கொடுப்பது என்று முடிவு செய் யப்பட்டது.

மேலும் குறைந்த கூலி யில் வெளி மாநில தொழிலாளர் களைத் தேங்காய் உரிக்கும் தொழி லில் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு பிஎப்,இ எஸ் ஐ பிடித்தம் செய்வதற் கான நடவடிக்கையை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் துறையும் தமிழக அரசும் உரிய ஆய் வுகள் செய்து தமிழக தேங்காய் உரிக் கும் தொழிலாளர்கள் பணி பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேங்காய் உரிக்கும் தொழிலாளர் களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். நலவாரியத் தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் களுக்கு ரூ3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடத் தில் மருத்துவ பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த பேரவைக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட துணை செயலாளர்  ஜெகதீ சன், பொது தொழிலாளர் சங்கத்தின்   தலைவர் ரங்கநாதன்,  கட்டுமான கட் டிட சங்கத்தின் தாலுகா தலைவர் கன கராஜ், பொது தொழிலாளர் சங்கத் தின் துணைச் செயலாளர் பாபு, இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமசாமி  உள் ளிட்ட திரளான தேங்காய் உரிக்கும்  தொழிலாளர்கள் கலந்து கொண்டார் கள். இந்த பேரவைக்கூட்டத்தில், தேங் காய் உறிக்கும் தொழிலாளர் சங்கத் தின் ஒருங்கிணைப்பாளராக சடை யபாளையம் தருமன் தலைமையில்  உறுப்பினராக வளாவடி முருகேசன்,  குரல்குட்டை பழனிசாமி, கோரமங் கலம் காளிமுத்து, சனுப்பட்டி முரு கவேல்,சடையபாளையம்  மகுடீஸ் வரன் உள்ளிட்ட திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டார்கள்.