districts

img

இலவச வீட்டுமனை கேட்டு ஜமாபந்தியில் விதொச மனு

நாமக்கல், ஜூன் 15- இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, உடனடி யாக வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜமாபந்தி நிகழ்ச்சியில்  விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமா பந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட் டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், திருச்செங்கோடு கோட்டாட்சியர் தலைமையில், வட்டாட் சியர் சண்முகவேல் முன்னிலையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப் போது, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் கோட்டாட் சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட் டது. பள்ளிபாளையம் ஒன்றியம், ஆயக் கவுண்டம்பாளையம், தட்டாங்குட்டை, குளத்துக்காடு, நேரு நகர் போன்ற பகு திகளில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு அதிகாரிகளை சந் தித்து கோரிக்கை மனு வழங்கி வருகின் றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்  மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக்கொண்ட னர்.

இதனையடுத்து மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு சொந்தமான தரிசு இடங்களில் நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், விண்ணப்பம் அளித்தவர் களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்கப்படும். பட்டா மாறுதல் கோரி அளித்த மனுக்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, ஒன்றிய நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.