districts

அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ கருத்து

நாமக்கல், ஏப்.21- அனைவரும் வாக்களிப்பதை தேர் தல் ஆணையம் கட்டாயமாக்க வேண் டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நாமக்கல் லில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப் பின்றி, அமைதியான முறையில் மக்க ளவை தேர்தல் முடிவடைந்துள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்ட அனைவ ருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கி றேன். நகர்ப்புறங்களில் சுவர் விளம்ப ரங்களுக்கு எவ்வாறு தடை உள்ளதோ, அதேபோன்று கிராமப்புறங்களிலும் சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்க லாம். வாக்குச்சாவடி அலுவலர்க ளுக்கு போதிய பயிற்சி இல்லை. கொக் கராயன்பேட்டை வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்றபோது இயந் திரம் பழுதானதை சரிசெய்ய முடியா மல் அரை மணிநேரம் தாமதமானது. வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி அருகில் 200  மீட்டர் தொலைவில், தேர்தல் நாளன்று  அரசியல் கட்சிகளின் அலுவலகம்  அமைப்பதைத் தடுக்க வேண்டும்.  இதன்மூலம் தேவையற்ற பிரச்சனைக ளைத் தவிர்க்கலாம். இந்தத் தேர்தலில் கடும் கோடைக்காலத்தையும் பொருட் படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ள னர். இருப்பினும், 30 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நடைமு றையை தேர்தல் ஆணையம் கொண்டு  வர வேண்டும். நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் அதிக  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.  இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பணியாற் றிய திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மதுரா செந்தில், டி.எம்.செல்வகணபதி, அமைச்சர் மா.மதிவேந்தன், சட்ட மன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி  தலைவர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2019  தேர்தலை போன்று மிகப்பெரிய வெற் றியை இத்தொகுதியில் இந்தியா கூட் டணி பெறும், என்றார். இப்பேட்டியின் போது, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.கே.பி.சின்ராஜ், வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் உட னிருந்தனர்.