districts

img

கொடுமுடியில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு, ஏப். 2- இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து கொடுமுடியில் வாக்கு சேக ரிக்கப்பட்டது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்  போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா  செயலாளர் கே.பி.கனகவேல், அமிர்தலிங் கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழ னிச்சாமி, முருகேசன், ஆதிதமிழர் பேரவை பழனிச்சாமி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பலர் கலந்து கொண்டு கே.இ.பிரகாஷிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.