கோவை, பிப்.15- புதிய கல்விக்கொள்கையை அமலாக்கி னால் தொழில் கல்வியின் தரம் சீரழியும் என வலியுறுத்தி லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவையில் ஐடிஐகளில் சி.பி.டி. தேர்வை ரத்து செய்ய வேண்டும். பாடத்திட்டத்தில் பயிற்சி நேரம் குறைத்ததை திரும்ப பெற வேண்டும். தேசிய திறன் தகுதி குறைத்ததை திரும்ப பெற்று பழைய நிலை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் சங் கத்தின் தமிழ்மாநில துணைத் தலைவர் ப. நடராஜன், ஆனைகட்டி கிளைச் செயலாளர் பி.கார்த்திக், கோவை மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சாங்கம் உள்ளிட்ட தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.