திருப்பூர், ஜூன் 16- தனியார் பள்ளிகளுக்கு இணை யான கட்டமைப்பு வசதிகளுடன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் காட்டி, விளையாட்டுத்துறையிலும் சிறப் பாக செயல்பட்டு வெங்கமேடு வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்து வருகிறது. திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலை, வெங்கமேட்டில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 381 மாணவ, மாணவிகளில் 92 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று சையத்நிலமா என்ற மாணவி அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலி டம் பிடித்துள்ளார். அதேபோல் 12 ஆம் வகுப்பில் தேர்வெழுதிய 357 மாணவ, மாணவியர்களின் 94 சதவி கிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 600 க்கு 578 மதிப்பெண் பெற்ற சுபஹரிணி என்ற மாணவி கணக்குப் பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய மூன்று பாடங்க ளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த ஆண்டு நடை பெற்ற நீட் தேர்வில் இப்பள்ளி மாண வன் சந்துரு மாவட்ட அளவில் முதலி டம் பிடித்துள்ளார். திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் இப்பள்ளி தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறது. திருப்பூர் மாவட் டத்தில் அரசு நடத்திய கலை இலக் கியப் போட்டியில் மேல்நிலைப் பிரி வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மாநில அளவில் நடை பெறும் 7 போட்டிகளுக்கு இப்பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
திருப்பூர் சிக்கண்ணா கலை கல் லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்டு நட னம் ஆடியது பெரிதும் பாராட்டப்பட் டது. மேலும் 40 மாணவர்களின் சிலம் பத் திறமையை ஊடகங்களில் வெளி யாகி பாராட்டுப் பெற்றது. பள்ளியின் உட்கட்டமைப்புகள் குறித்து தலைமை ஆசிரியர் ராஜ துரை கூறுகையில், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஆர்.குப்புசாமியின் முன்னெடுப்பில் பள்ளியில் ரூ.இரண் டரை லட்சம் செலவில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று வகுப்பறைகளுக்கு மேற்கூரை அமைத்து 1048 இருக்கைகளுக்கு வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. ரூ. ஒன்றரை லட்சம் செலவில் 80 அடி கழிவறைகளுக்கு டைல்ஸ் ஒட்டப்பட் டுள்ளது. கூடுதல் கழிவறைகள் கட்டு வதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பள்ளி வளர்ச்சிக்குழுவின் அர்ப்ப ணிப்பு மிக்க பங்களிப்புடன் இப்படி எல்லா துறைகளிலும் மாணவர்களை சிறப்பாக வழி நடத்தும் இப்பள்ளி திருப்பூர் மாவட்டத்தில் பல பள்ளிக ளுக்கும் முன் உதாரணமாக உள்ளது. உதவும் மனம் படைத்த நன்கொடை யாளர்கள் வாய்ப்பிருக்கும் பகுதி யில் இது சாத்தியம் என்றாலும், அரசு நிர்வாகம் அரசுப்பள்ளிகளின் தேவைக்கு முழுமையாக நிதி உதவி செய்து மேம்படுத்தினால் இது போல் மேலும் பல அரசுப்பள்ளிகள் சிறப் பாக மிளிரும் வாய்ப்புள்ளது.