districts

img

நிலுவை சம்பளத்தை வழங்கிடுக விதொச ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 9- ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகள் அனை வருக்கும் வேலை நாட்களை முழுமையாக வழங்க வேண் டும். தாமதமாகும் நாட்களுக்கு வட்டியுடன் சம்பளம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநில அரசாங்கம் ஏற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் தி.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.துரை சாமி, மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி, விவசாய தொழிலா ளர் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் செய லாளர் ஜே.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றி யச் செயளாலர் சி.சபரீஸ்வரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சி.மந்திரியப்பன், மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஜோதிமணி, தாலூகாத் தலைவர் பரிமளா,  வாலிபர் சங்க தாலூகாத் தலைவர் ரவிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.