districts

img

பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்க விதொச வலியுறுத்தல்

தருமபுரி, மே 15- மிட்டாரெட்டிஅள்ளி கிராம மக்களுக்கு வருவாய்த்துறை யின் மூலம் வழங்கப்பட்ட இலவச மனைபட்டாவுக்கான இடத்தை அளந்த கொடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் சிவசந்தி ரன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது: நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டா ரெட்டிஅள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வரு கின்றனர். இம்மக்களுக்கு வருவாய்த்துறையின் மூலம் 2021 ஆம்‌ ஆண்டு சர்வே எண்: 153/3-ல் 48 நபர்களுக்கு மனைபட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடந்த ஏப்.24 ஆம் தேதி யன்று நல்லம்பள்ளி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப் பட்டது. இந்த மனுவை பரிசீலித்த வட்டாட்சியர் இடத்தை அளந்து காட்டுவதாக உறுதியளித்தார். அதனடிப்படையில் மே 11 ஆம் தேதியன்று இடத்தை அளந்து கொடுக்க வந்த அரசு அலுவலர்களை, அப்பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகா ரிகள் திரும்பி சென்று விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.