தருமபுரி, ஜன.30- தருமபுரியில் வீட்டு மனைப் பட்டா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத் திற்குட்பட்டது இட்லப்பட்டி கிரா மம் உள்ளது. இக்கிராமத்தில் சர்வே எண் 15/4 கிராம நத்தம் நிலத்தில் உள்ள குடும்பங்கள் பல ஆண்டுக ளாக பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து அரசி டம், பல முறை மனு அளித்தும் இது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அப்பகுதி மக்களுக்கு வீட்டு மனைபட்டா உட னடியாக வழங்க வேண்டும். சுடு காட்டு ஆக்கிரமிப்பினை அகற்றி பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும். சர்வே நம்பர் 18/1-ல் மனைபட்டா கொடுத்த மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண் டும். இரண்டு ஆண்டுகளாக ஓகேனக் கல் குடிநீர் இல்லாத மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, அரூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்த லிங்கம், மாநிலச் செயலாளர் ஜி.கண பதி ,மாவட்டத் தலைவர் கே.கோவிந் தசாமி, மாவட்டப் பொருளாளர் சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் பி.குமார், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் இ.கே.முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.