நாமக்கல்,பிப். 15- ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை நிலம் வழங்க கோரி விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் வட்டம் பல்லக்காபாளை யம் ஊராட்சியில் ஏராளமான ஏழை எளிய மக்கள் சிரமப்பட்டு வாழ்க் கையை நகர்த்தி வருகின்றனர். இவர் கள் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை மாத வாடகை கொடுத்து வசிக்க முடி யாத நிலை உள்ளது. எனவே, இவர்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி, பல்லக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முன்பு, அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கத் தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் மாநில செயலாளர் சி. துரைசாமி தலைமையில் ஏராளமா னோர் பல்லக்காபாளையம் கிராம நிர்வாக அலுவல வளாகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் சின்னதாய், ரேவதி, சித்ரா, எம்.கலா, அமராவதி, ஜெயா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இப்போராட் டத்தை வாழ்த்தி, பால் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.பெரு மாள், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.அசோகன், குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் என். சக்திவேல், வடக்கு ஒன்றிய கட்சிச் செயலாளர் ஆர்.சந்திரமதி உள்ளிட் டோர் உரையாற்றினர். இதுகுறித்து போரோட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கூறுகையில், இப்பகுதியில் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள், பாத்திரம் தேய்த்து பிழைக்கக் கூடியவர்கள், சலவைத் தொழிலாளர்கள், விதவைகள் என ஏரளாமானோர் உள்ளனர். இவர்க ளின் 98 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக வலி யுறுத்தி வருகிறோம். ஆனால், அதி காரிகள் கண்டு கொள்ளாமல் உள்ள னர். ஆகவே, தீர்பு ஏற்படும் வரை தொடர்ந்து போராடுவது என முடி வெடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து, குமாரபாளை யம் காவல் ஆய்வாளர் தவமணி, தாசில்தார் சண்முகவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந் தன், வருவாய் ஆய்வாளர் உள் ளிட்ட அதிகாரிகள் போராட்டக்கா ரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில் பல்லக்காபாளையம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள் ளதா என சர்வே செய்யப்பட்டு, வீட்டு மனை பட்டா கோரி உள்ள குடும்பங் களை நேரில் சந்தித்து, உறுதி செய்த பிறகுதகுதியான நபர்களுக்கு வீட்டு மனை நிலம் வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்ற னர்.