நாமக்கல், ஜன.6- விதிகளை மீறும் மதுபானக் கடைகள் மற்றும் சட்ட விரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என வலியு றுத்தி குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விதிகளை மீறி மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பா டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் அர்த்தநாரி, விஜய் ஆனந்த், ஈஸ்வரன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.