இந்திய கலை வடிவங்களில் மிகவும் தொன்மையானது தெருக்கூத்து. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளின் உன்னத வடிவமாக நடத்தப்பட்டு வரும் இக்கலை திறந்தவெளி இடங்களில், களம் அமைத்து நடத்தப்படுவ தால் இதனை தெருக்கூத்து என அழைக் கின்றனர். தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டு களில் செல்வாக்கு பெற்று வளர்ந்த இக்கலை 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நலிவ டைய துவங்கியது. இது ஒரு பொழுதுபோக்கு கலையாக மட்டுமின்றி, மக்களுக்கு தெரிந்த கதைகள், தெரியாத வரலாறுகள், நீதி போத னைகள் என தெருக்கூத்து வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டன. தற்போது பல நவீன கலைகள் உருவாகி, அவை காட்சி ஊடகமாக மக்களை சென்றடைந்தாலும், இன்று வரை கிராம மக்களிடம் தெருக்கூத்து பெற்றிருந்த நெருக்கத்தையும், ஈடுபாட்டை யும் மற்றவை பெறவில்லை என்றே கூற லாம். இதற்கிடையே, தெருக்கூத்து கலையை தங்களது வாழ்வின் ஒரு அங்கமாக, தங்க ளின் நோய் தீர்க்கும் மருந்தாக கருதி கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு தோறும் ஊர் கூடி விடிய விடிய தெருக் கூத்தை நடத்தி மகிழ்கிறது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிகுப்பம் பாளையம் என்னும் கிராமம். மேட்டுப்பாளை யம் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளிகுப்பம் பாளையம், பகத்தூர், மூலத்துறை, கிச்சகத்தி யூர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்க ளில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக காலரா, கொல்லை நோய் என அழைக்கப்பட்ட பிளேக் போன்ற நோய்கள் பரவி பெரும் உயிரி ழப்புகள் ஏற்பட்டன. வீடு தோறும் மரணங்கள் தொடர்ந்த அக்கால கட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலையும் அளிக்கும் வகை யில் இரண்ய நாடகம் என்ற தெருக்கூத்து இப்பகுதியில் நடத்தப்பட்டது. பக்த பிரகலாதனின் கோரிக்கையை ஏற்று திருமால் நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து வெளிவந்து தீமையின் அடையாள மான இரண்யனை அழிப்பதாக கூறும் நாட கத்தால் அன்று தங்களது ஊரை பிடித்த நோய் பிணி மெல்ல, மெல்ல விலகி மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் திரும்பியதாக தெரிவிக்கும் கிராம மக்கள், அன்று முதல் இன்று வரை பல தலைமுறைகளாக தொடர்ந்து இந்த தெரு கூத்து நாடகத்தை தங்களது ஊரின் நோய் தீர்க்கும் மருந்தாக கருதி நடத்தி வருகின்ற னர். ஊர் மக்கள் ஒன்று கூடி முதல் நாள் மாலை துவங்கி விடிய விடிய நடத்தப்படும் இந்த இரண்ய நாடக தெருக்கூத்து இரவு முழுவதும் தொடர்ந்து அடுத்த நாள் காலை இரண்யன் கொல்லப்பட்டு பின்னர் நாடகம் நிறைவடை யும். ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கால கட்டுப்பாடுகளால் இதில் மாற்றம் செய்யப்பட்டு வியாழனன்று காலை துவங்கி இரவுக்குள் முடிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்ளூர் கிராமத்தினரே இத்தெருக்கூத்தில் வேடமிட்டு நடிப்பதும், இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் எந்த பகுதி யில் பணி நிமித்தமாக இருந்தாலும் இத் தெருக்கூத்து நாடகம் நடத்தப்படும் நாளில் தவ றாமல் ஊர் திரும்பி இக்கூத்தில் பங்கெடுப்ப தும் தனிச்சிறப்பு. நம் பாரம்பரிய கலைகள் கலைக்காக மட் டுமே உருவாக்கப்பட்டதல்ல, மக்கள் பயன் பாடிற்காகவே உருவாக்கப்பட்டவை என வலி யுறுத்தும் இக்கிராம மக்கள், நாங்கள் நோய் நொடியின்றி வாழ வழிவகுக்கும் இக்கலை வடிவம் இனி வரும் ஆண்டுகளிலும் விடாது தொடர்வோம் என்கின்றனர். இவர்களின் அசையாத நம்பிக்கை ஒரு தொன்மையான கலையினை வாழ வைத்து கொண்டிருகிள் றது. -சரவணபாபு