districts

img

பெண்களை மிரட்டும் ரேஞ்சர் கிராம மக்கள் மனு

தருமபுரி பிப்-26, சோலைகொட்டாய் கிராமத்தை அச்சுறுத் தும் வனத்துறை ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம்  சோலைகொட்டாய் கிராமத்தில் சுமார் நூறு  குடும்பகள் உள்ளன. ஏழை, எளிய குடும்பங் களாகிய எங்களிடம் பெரும்பகுதி நிலம் இல்லை. விவசாய கூலி வேலை மற்றும் கற வைமாடு வைத்து பால் ஊற்றி பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், எங்கள்  கிராமத்தைச் சேர்ந்த சிவன், ராஜி, முத்து சாமி, தங்கவேல் ஆகியோர் மீது மான்கறி  வைத்திருந்ததாக கூறி மொரப்பூர் வன சரக ரேஞ்சர் ஆலயமணி அடித்து துன்பு றுத்துகிறார். பொய்யான முறையில் அபராதம் விதிக்கிறார். எங்கள் கிராமத் திற்கு வந்து பெண்களை மிரட்டுகிறார். இரவுநேரங்களில் பெண்களை புகைப்படம் எடுக்கிறார். 300 வனத்துறையினரை இறக்கி வாச்சாத்தி கிராமம் போன்று சம்பவம் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார். ரேஞ்சர் ஆலயமணியால் எங்கள் கிராம பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.  எனவே ரேஞ்சர் ஆலயமணி மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.