சேலம், ஜன.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்டத்தால் சுடுகாட்டு பாதை கிடைத்ததைத் தொடர்ந்து, தும்பிபாடி கிராமத்தில் செங்கொ டியை ஏற்றி கிராம மக்கள் எழுச்சி முழக்கமிட்டனர். சேலம் மாவட்டம், காடையாம் பட்டி தாலுகா, தும்பிபாடி கிரா மத்தில் போயர் தெருவில் வாழும் மக்கள் இறப்பு நேரிடும் போது உடலை எடுத்துச் செல்ல முடியா மல் கைபிணமாக உடலை சுமந்து செல்லும் அவலம் இருந்து வந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சியு டன் இணைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தின் விளைவாக கடந்த ஜன. 5 ஆம் தேதியன்று ஒத்தையடிப் பாதையில் பத்து அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பகு தியில் கிளை செயலாளர் முருகன் தலைமையில் கொடியேற்று விழா எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொ டியை மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.குணசேகரன், எஸ்.கே.சேகர், ஓமலூர் தாலுகா செயலா ளர் ஈஸ்வரன், தாலுகாக் குழு உறுப் பினர்கள் மற்றும் ஊர் பொதுமக் கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.