திருப்பூர், பிப்.16- பல்லடத்தில் நடை பெற்ற அறிவியல் திருவிழா வில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க வானவில் மன்றம் சார்பில், மாவட்ட அளவி லான கிராம அறிவியல் திருவிழா பல்லடம் ஒன்றியத்தில் சனியன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஒன்றியங்களில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும், பதக்கங்க ளும் வழங்கப்பட்டது. சிறந்த 10 படைப்புக ளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்ற மாவட்ட கருத்தாளர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். மக்களிடையே அறிவி யல் மனப்பான்மையை ஏற்படுத்த, இது போன்ற அறிவியல் பிரச்சார நடவடிக்கை களை தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டக்குழு சுயேட்சையாக தொடர்ச்சி யாக செய்து வருகிறது என, அமைப்பின் மாவட்டச் செயலாளர் கௌரி சங்கர் தெரி வித்தார்.