நாமக்கல், ஏப்.15- ராசிபுரம் வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்தி விவசாய தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மணல் அள்ளும் இரு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பகையில் வட்டாட்சியர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குமாரபாளையம் வட்டம், கொக்க ராயன்பேட்டை பாப்பம்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூர்ணம், ஒன்றிய தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் கே.மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் பார்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.