திருப்பூர், டிச. 9 – நான்கில் ஒரு பெண் குடும்பத்தில் உள்ள வர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி றார்கள் என்று களமட்ட ஆய்வில் தெரியவந் திருப்பதாக சேவ் அமைப்பு தெரிவித்துள் ளது. திருப்பூரில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை மாநில அளவில் வன்மு றைக்கு எதிரான கூட்டணி என்ற தலைப்பில் சேவ் அமைப்பு ஏற்பாடு செய்த கலநதுரையா டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேவ் நிர்வாக இயக்குநர் ஏ.அலோ சியஸ் தலைமை உரையாற்றினார். செயல் இயக்குநர் வியாகுல மேரி வரவேற்றார். இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீர பாண்டி, 15 வேலம்பாளையம், ஆத்துப்பா ளையம் ஆகிய 3 வார்டுகளில் நடத்தப்பட்ட கள ஆய்வு பற்றிய விபரம் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி யில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. உடல் நலம், மனித உரிமைகள், வளர்ச்சிக் கண் ணோட்டங்களில் பெண்கள் மற்றும் இளம் பருவப் பெண்களுக்கு இடையே நேரிடும் பாலின மற்றும் பாலியல் துன்புறுத்தல், வன் முறை அனுபவங்களை ஆராய்வது. பெண்க ளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற் றும் வன்முறை மற்றும் அதன் விளைவுகள், ஆண்களின் அணுகுமுறையைத் தீர்மா னித்தல் உள்ளிட்ட நோக்கங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 30.7% வாய்மொழி வன்முறைகள், 23.75% உடல்ரீதியான வன்முறைகள், 25.125% உளவியல் வன்முறைகள், 16.13% பாலியல் வன்முறைகள், 25.6% சமூக-பொருளாதார வன்முறைகள் நெருங்கிய உறவுகளில் பெண்களுக்கு எதிராக நடை பெறுகிறது. 23.4% குடும்ப வன்முறை அல்லது நெருக்கமான உறவுகளில் வன்முறை, 22.13% துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களில் 25% பேர் குடும்பத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்ப டுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குடும்ப நல மூத்த சிவில் நீதிபதி எம்.மேகலா மைதிலி பேசுகையில், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என் றார். மேலும் பாதிப்புக்குள்ளானோருக்கு இழப்பீடு பற்றி விளக்கினார். பாதிக்கப்பட்ட பெண்களை அவ மானப்படுத்துவதை நிறுத்தினால்தான் புகார் களை தெரிவிக்க முன்வருவார்கள், ஆண்க ளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் பாலின நிகர்நிலைக் கல்வியை அளிக்க வேண்டும் என சமூகநலத்துறை அலுவலர் ஆர்.அம் பிகா வலியுறுத்தினார். பாலுட்டும் தாய் மற் றும் தந்தைக்கும் பாலின பாகுபாடு இல்லா நிலையை உருவாக்க குழந்தை பருவத்தி லேயே பாலின கல்வியை அளிக்க வேண் டும் என அங்கன்வாடித் திட்ட அலுவலர் கே. மரகதம் கூறினார். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி, சிஐடியு பனியன் தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜி.சம் பத், பொருளாளர் கே.நாகராஜ், நிர்வாகிகள் பாண்டியராஜ், மாணிக்கம், சஜீனா உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநி திகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாட் டைக் களைவதற்கு அரசு, சமூகம் மற்றும் குடும்பத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற் றங்கள், அனைவரின் பங்களிப்பு பற்றி வலியு றுத்திக் கூறினர்.