districts

img

சாலை அமைக்க கோரி வேட்டுவபாளையம் பகுதிமக்கள் மனு

திருப்பூர், ஜ.9- வேட்டுவபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் சாலையை, பழைய சாலை இருந்தபடியே அமைக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து வேட்டுவபாளையம் பகுதி மக்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் தெற்கு வட்டம், மங்கலம் வேட்டுவ பாளையம் 212 மந்தைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம்  சுமார் 4 ஏக்கர் உள்ளது. மேற்படி மந்தை நிலத்துக்குட்பட்ட பகு தியில் மெட்டல் சாலை இருந்தது. இதை பொதுமக்கள் காலம்  காலமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், இதன் அருகில்  கிறிஸ்துவ கல்லறை, மின் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவையும்  உள்ளது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் திடீரென நடுப்புறமாக தார்ச்சாலை அமைத்து இடத்தை இரண்டு முக் கோணமாகப் பிரித்து தடம் ஏற்படுத்திவிட்டனர். தற்போது  அந்த சாலையும் சேதமடைந்து புது சாலை போடுவதற்கான  வேலைகள் நடைபெற உள்ளது. எனவே பழைய சாலை இருந்தபடியே புதிய சாலை அமைக்க வேண்டும். இதன்மூ லம் இரண்டாக பிரித்துள்ள புறம்போக்கு நிலம் பாதுகாக்கப்ப டும். கல்லறை மற்றும் டிரான்ஸ்பார்முக்கு செல்லும் வழியும்  பாதிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.