ஈரோடு, செப்.30- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இறுதி வரை களம் கண்ட மார்க்சிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவர் மறைந்த போராளி பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை யொட்டி சனியன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமைக்கெதி ரான இயக்கங்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்தது. பி.சீனிவாசராவ் நினைவுதினத்தை முன் னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான இயக்கங்கள் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின மக்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு கோபிசெட் டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சத்திநகர், தோப்பூர் கிராமத்தில் 80 ஆண்டுகளாக 1.28.5 ஹெக்டேரில் 198 பட்டி யல் இன குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங் கப்படவில்லை.
அதேபோல் அந்தியூர், மந்தை மாரியம் மன் கோவில் தெருவில் குடியிருக்கும் 32 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்க ளில் 9 பேருக்கு மட்டுமே பட்டா கொடுக்கப் பட்டுள்ளது. எஞ்சிய 23 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை கேட்டும், போராட்டம் நடத்தியும், பட்டா வழங்கப்படவில்லை. இதேபோன்று, சத்தியமங்கலம், மலையடிப்புதூர், பெரி யார் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டது. இதில் 98 பேருக்கு வீட்டு மனை ப் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை வக்ஃப் வாரியம் தனது நிலம் என உரிமை கோரியதால் பட்டா வைத்துள்ள பட்டியல் இன மக்கள் எவ்வித உரிமை இல் லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கி யில் கடன் பெற்று வீடு கட்ட இயலாமல், வேறு வகையில் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அரசு தலையிட்டு நிலப் பயன்பாட்டை உறுதி செய்திட வேண்டும் என வும், மேற்குறிப்பிட்ட மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா ளர் பி.சுகந்தி தலைமையில் சனியன்று காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தினிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்தியூர் மக்களுக்கு 15 நாட்களில் பட்டா வழங்குவதாக கோட்டாட் சியர் உறுதி அளித்தார். சத்தி தோப்பூர் பகு தியில் குடியிருக்கும் பகுதியின் நில மதிப்பு தொகை அதிகம் என்பதால் அரசின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தவுடன் பட்டா தருவதாக வாக்கு றுதி அளிக்கப்பட்டது. இவை உள்ளிட்ட அனைத்து பிரச்சனை களுக்கும் தீர்வு காண் பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார். இத னால் காத்திருக்கும் போராட்டம் தற்கா லிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டத் தலைவர் பிபி.பழனிச் சாமி, செயலாளர் மா.அண்ணாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், வி.தொ.ச மாவட்ட தலை வர் கே.ஆர்.விஜயராகவன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லலிதா மற்றும் இடைக் கமிட்டிச் செயலாளர்கள் கே.சி. ரங்கசாமி, ஏ.கே.பழனிசாமி, எஸ்.மாணிக் கம், ஞாம. ராஜசேகரன், சுரேஷ் பாபு, பி. ஜெகநாதன், கே.ரங்கசாமி, கே.ஆர்.திருத்த ணிகாசலம், கே.எம்.விஜயகுமார், சி.முருகே சன், சுந்தரராஜன், டி.சுப்பிரமணி, ஏ.பி.ராஜன், எஸ்.வி.மாரிமுத்து, வி.ஆர்.மாணிக் கம், வாசுதேவன், பாண்டியன், மூர்த்தி, ரவி, ஆகியோர் உட்பட சுமார் முன்னூறுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
சேலம்
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் சேலத்தில் பல்வேறு பகுதிக ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குலத்தொழிலை மீண்டும் திணிக்கும், ஒன்றிய பாஜக அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்தும், இதனை உடனடியாக. இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சேலத்தில், மேட்டூர் சின்ன பார்க் திடல் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தை வேலு தலைமை ஏற்றார். மாவட்டச் செயலா ளர் வீ.இளங்கோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை குறித்து சேலம் சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செய லாளர் எஸ்.எம்.தேவி ஆகியோர் விளக்கி பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொருளாளர் ராமசாமி நன்றி கூறி னார். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஞானசெளந்தரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திர ளானோர் பங்கேற்றனர்.
மேட்டூர்
இதேபோல், மேட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சேலம் மாவட்ட துணைச் செயலாளர் செ.கருப்பண்ணன் தலைமை ஏற்றார். சிஐடியு சேலம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கே. சிவக்குமார், ஆர். கோவிந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வீ.இளங்கோ நிறைவுரையாற் றினார். இதில் மாதர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். திருப்பூர் கீழ் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக உழைக்கும் மக் களை அணிதிரட்டிய தோழர் பி.சீனிவாசரா வின் நினைவேந்தல் கூட்டம் விதொச சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக நடை பெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார்பில் பெருமாநல்லூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பரணி ஆர். சீனிவாசன் தலைமை ஏற்றார். இதில், மாவட் டச் செயலாளர் எ.பஞ்சலிங்கம், ஒன்றியச் செய லாளர் கே.சுப்பிரமணியம், தவிச ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி, ஒன்றிய செயலா ளர் எஸ்.அப்புசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் சே. குருவாயூரப்பன் நகரில் ஒன்றியக்குழு உறுப் பினர் ஆர்.சந்திரன் தலைமையிலும், பள்ளி பாளையத்தில் ஒன்றியப் பொருளாளர் பி. கிருஷ்ணசாமி தலைமையிலும் தோழர் பி.சீனிவாசராவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத் தப்பட்டது. உடுமலை ஒன்றியக்குழு அலுவலகத் தில் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மல ரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விதொச ஒன்றியத் தலைவர் சி.முத்துச் சாமி, ஒன்றியச் செயலாளர் எம்.ரங்கராஜ் மாவட்டச் செயலாளர் எ.பஞ்சலிங்கம், தவிச மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) தலைவர் கி..கனகராஜ் மற்றும் விதொ சவினர் திரளானோர் பங்கேற்றனர்.