districts

img

நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

உதகை, ஜூன் 17- நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.  இந்தியாவின் பல மாநி லங்களில் பெட்ரோல் விற்பனை நிலை யங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல விற் பனை நிலையங்கள் பெட்ரோல், டீசல் இல்லாததால் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் ஓரிரு  மாவட்டங்களில் பெட்ரோல் டீசலுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப் பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத் தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டி கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில் சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை முற் றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பவர் பெட்ரோல் விநி யோகம் மட்டுமே உள்ளது. இதனால் உதகையிலிருந்து செல்லும் காய்கறி வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட பெட் ரோல் பங்குகள் விற்பனை நிலைய தலைவர் வெங்கடேஷ் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் 26 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் 15க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட் ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள் ளிட்ட இடங்களில் தட்டுப்பாடு அதிக மாக உள்ளது. இதற்கு பெட்ரோல்,  டீசல் விநியோகம் 30 சதவீதம் குறைந்து இருப்பது முக்கிய காரணமாகும். ஆனால் இந்தியன் ஆயில் நிறுவனங் கள் இந்த பிரச்சினை இதுவரை வர வில்லை. அதே சமயத்தில் இந்துஸ் தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பங்கு களில் மொத்தமாக, வழக்கமாக  எரி பொருள் நிரப்புவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு வருவதால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்படு கிறது, என்றார்.