குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துக்கட்சி மற்றும் சமூக கூட்டியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் ஆகியோர்களின் பங்களிப்பை விளக்கும் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசைக்கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சனியன்று பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம முன்பு நடைபெற்றது.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துக்கட்சி மற்றும் சமூக கூட்டியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன் ஆர்பபாட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் கபூர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் முஸ்தபா, ராஜா ஜெமீசா, ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் கோபால், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நகர செயலாளர் பழ அசோக் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
முடிவில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் ஸ்டாலின் பழனிச்சாமி நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.