districts

img

சிறுதானியத்தின் நன்மை குறித்து வாகன பேரணி

கோவை, டிச.29- சிறுதானியங்களின் ஊட் டச்சத்து நன்மைகளை வலியு றுத்தும் புதிய முயற்சியாக ‘ஈட்ரைட் மில்லட் பைக்கத் தான்” இருசக்கர விழிப்பு ணர்வு பேரணியினை கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத் தார். தமிழ்நாடு உணவுப் பாது காப்பு மற்றும் மருந்து நிர்வா கத்துறை, ஸ்ரீசக்தி பொறியி யல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச் சத்து நன்மைகளை வலியு றுத்தும், புதிய முயற்சியாக ‘ஈட்ரைட் மில்லட் பைக்கத் தான்” இருசக்கர விழிப்பு ணர்வு பேரணியினை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெள்ளியன்று துவக்கி வைத்தார். இவ் விழிப்புணர்வு பேரணி ஆட் சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி உக்கடம், பொள் ளாச்சி வழியாக ஸ்ரீசக்தி  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை  வந்தடைந்தது. இந்நிகழ்ச்சி யில் ஸ்ரீசக்தி பொறியியல் மற் றும் தொழில்நுட்பக் கல்லூரி யின் தலைவர் தங்கவேலு, உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மு.தமிழ் செல்வன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.