சேலம், டிச.22- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் அம்மாபேட்டை முதல் கொண்டலாம்பட்டி வரை வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். எரி பொருட்களின் விலை குறைக்க வேண்டும். இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும், விவ சாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் விவ சாய தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலியும், 200 நாள் வேலையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வாகனப் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை முதல் கொண் டலாம்பட்டி வரை இந்த பிரச்சார இயக்கம் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன் தலைமை நடைபெற்றது. இதில சிஐடியு மாவட்டச் செய லாளர் கோவிந்தன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பன்னீர் செல்வம், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பழனியப்பன், ஏஐ சிடியு மாவட்டச் செயலாளர் முனுசாமி, எச்எம்எஸ் நிர்வாகி பழனிசாமி, ஐஎன்டியுசி நடராஜன், ஏஐசிசிடியு வேல்முரு கன், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.