கோவை, அக். 6- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவருமான யு.கே. சிவஞானம் மறைவையடுத்து பல்வேறு அமைப்பினர் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் தலைவர் தி.மணி, செயலாளர் அ.கரீம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 37 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழி யராக பணியாற்றி வந்த யுகேஎஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட யு.கே. சிவஞானம் அவர்கள் உடல் நிலை பாதிப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மக் களுக்கான பல்வேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். கோவை காளப்பட்டி ஆலய நுழைவு போராட் டம், தந்தை பெரியார் நகர் தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டம் போன்ற சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுக்க தீவிரமாக களப்பணி ஆற்றியவர். தீவிர புத்தக வாசிப்பா ளர். இந்தியாவை உலுக்கிய வைக்கம் என்ற புத்தகத்தை எழுதியவர் தீக்க திர் நாளேட்டில் தொடர்ச்சியாக அரசி யல் கட்டுரையை எழுதி வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் எல்லா நிகழ்வுகளி லும் பங்கேற்பாளராகவும் வழிகாட்டு பவராகவும் இருந்துள்ளார். கடை சியாக கடந்த செப்டம்பர் 17 தேதி கோவையில் நடந்த கருஞ்சட்டை பேரணி, பொதுக்கூட்டத்தை ஒருங்கி ணைத்த தோழர் சிவஞானம் அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் மருத்து வனையில் தீவிர சிகிச்சையில் இருந்த வர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமாகியுள்ளார். ஒரு நல்ல மக்கள் ஊழியனை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி இயக் கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் கட்சி ஊழியர்கள் தோழர்கள் அனைவருக் கும் எங்களது ஆழ்ந்த வருத்தங்களை உரித்தாக்குகிறோம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தபெதிக
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில துணைத்தலைவர் கோவை மாவட்ட மார்க்சிய கட்சி செயற் குழு உறுப்பினர் யுகே சிவஞானம் அவர் கள் இயற்கை எய்தியதை அறிந்து மன வேதனையுற்றேன். கொண்ட கொள் கையில் தீராத பற்றும் செயற்களத்தில் தீவிர ஈடுபாடும் கொண்ட தோழர் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களோடு தோழமையோடு இணைந்து ஓயாது உழைத்தவரை இழந்து விட்டோம். அவரை இழந்து வாடும் தோழர்களுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்புலிகள்
தமிழ்புலிகள் அமைப்பின் தலை வர் நாகை திருவள்ளுவன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், அன்னாருக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம். தோழர் யுகேஎஸ் என அனைவராலும் அன்போடு அழைக்கப் பட்டு வந்த யுகே.சிவஞானம் அவர்க ளின் மறைவை மனம் ஏற்க மறுக்கி றது. சிபிஎம் கட்சியில் நீண்ட காலமாக முழு நேர ஊழியராக இருந்தவர். எங் கெங்கெல்லாம் தீண்டாமை கொடுமை கள் நடக்கிறதோ அங்கெல்லாம் தன் னுடைய எதிர்ப்பு குரலை பதிவு செய்த வர். தமிழ்ப்புலிகள் கட்சி முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் பங் கேற்று தனது குரலை பதிவு செய்தவர். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வர்ஷினிபிரியா- கனகராஜ் ஆணவ படுகொலைக்கு தமிழ்ப்புலிகள் கட்சி யோடு இணைந்து போராட்டம் நடத்தி யவர். தற்பொழுது தமிழ்ப்புலிகள் கட்சி முன்னெடுத்த உக்கடம் பகுதியிலே 520 குடும்பங்களுக்கு வீடுகளை உடனே கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன் னிட்டு மாவட்ட முதன்மை பொறியாளர் அவர்களை தோழர்களோடு சென்று சந்தித்து தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாக வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தியது இந்த சமூகத் தின் மேல் அவருக்கு இருந்த அக் கரையை காண்பித்தது. தீக்கதிர் நாளித ழில் அவர் எழுதிய பல கட்டுரைகளை தமிழ்ப்புலிகள் கட்சி வழிகாட்டுதலுக் காக பயன்படுத்தியதுண்டு. தோழர். யுகே. சிவஞானம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்ப்புலிகள் கட்சி ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச்செயலாளரும் கட்சி யின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டி ருந்தவருமான தோழர் சிவஞானம் இன்று (06.08.2024) பிற்பகல் இயற்கை எய்தினார் என்ற செய்தியைத் கோவைத் தோழர் பத்மநாபன் அவர்கள் மூலம் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இந்தியாவிலுள்ள முக்கிய இடதுசாரிக் கட்சிகளும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும், சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் சீத்தாரம் யெச்சூரியின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடி யாமல் உள்ள சூழ்நிலையில், தோழர் சிவஞானம் அவர்கள் மறைந்தது தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக் கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக் கும் சி.பி.எம்கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் ஏற்பட்ட ேரிழப்பு. எனினும் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளைப் பற்றிய நினைவு நம் எல்லோர் மனங்களிலும் நீடித்திருக்கும். அவருக்கு என் வீர வணக்கம், செவ்வணக்கம் என எழுத் தாளரும், மார்க்சியவாதியுமான எஸ்.வி.ராஜதுரை இரங்கல் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.