districts

img

இலவச பட்டா வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட விஏஒ

நாமக்கல், மே 18- இலவச பட்டா வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர் வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டை அடுத்த மரப்பரை  கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவ லராக பணியாற்றி வந்தவர் சசிகு மார். இவர் சேலம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வந்த பெரியண்ணன் என்பவரின் மனைவி பாப்பாத்திக்கு சட்டத்திற்கு புறம் பாக தென்னமரத்துப் பாளையத் திலிருந்த அரசு புறம்போக்கு நிலத் தில் இலவச பட்டா வழங்கியுள் ளார். மேலும், திருமணம் ஆகாத நப ருக்கும், ஒரே குடும்பத்தில் இருவர் உட்பட ஐந்து பேருக்கு இலவச பட் டாக்களை வழங்கியுள்ளார். இவ் வாறு எவ்வித சட்ட விதிகளையும் கடைபிடிக்காமல் தவறான அடிப் படையில் செயல்பட்ட கிராம நிர் வாக அலுவலர் சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்யக்கோரி வையப்பமலை வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  எலச்சிபாளையம் மல்லசமுத் திரம் கிழக்கு ஒன்றிய செயலா ளர் வீ.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.அல மேலு துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் ஜீ.பழனியம்மாள், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கே. செல்வம், ஆர்.துரைசாமி, பி.விஜய் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் முடிவில் வருவாய் ஆய்வாளர் புஷ்பலாதாவிடம் புகார் மனு அளிக் கப்பட்டது.