தருமபுரி, ஏப்.27- அரூர் வாணியாறு அணை வறண்டதால் 10000 ஏக்கர் விவ சாய நிலங்கள் நீரின்றி வாடின. இத னால், பாதிப்படைந்த பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே சேர்வரா யன் மலைத்தொடரில், ஏற்காடு மலையின் பின்பகுதி அடிவாரத் தில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணை 65.27 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் பாப்பிரெட் டிப்பட்டி தாலுகாவில் உள்ள 17 கிராமங்களில் 10,517 ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. மேலும், அணை நீர் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வ தோடு அப்பகுதி செழிப்பாகவும் இருக்கும். கடந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான ஏற்காடு மலைப்பகுதியில் கனமழை பெய் தது. அணை நிரம்பி தண்ணீர் முழுவதும் பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் திறந்து விடப்பட் டது. ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் அணைக்கு நீர்வ ரத்து இன்றி நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது கோடை வெப்பத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு அணையில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மண் அள்ளுவ தற்காக வெட்டப்பட்ட குழிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. அணை வறண்டுள்ளதால் பாச னப் பகுதி விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். மேலும், அணை வறண்டுள்ள தால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகத்தொடங்கியுள்ளன. கருகும் பயிர்களை கணக்கிட்டு பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அணை வறண்டுள்ளதால் பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லா புரம் பேரூராட்சிகள் மற்றும் வெங்க டசமுத்திரம், மோளையானூர், போதக்காடு, பையர்நத்தம், பொம் மிடி உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.