districts

img

விபத்துகளை ஏற்படுத்தும் வஞ்சிபாளையம் சாலை

அவிநாசி, நவ.3 – அவிநாசி அருகே வஞ்சிபாளையம் அரசு பள்ளி எதிரே  அமைந்துள்ள திருப்பூர் செல்லும் சாலை பழுதடைந்து உள்ள தால் மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள் விபத்தைச் சந்திக் கும் நிலை உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் அரசு மேல்நி லைப்பள்ளி எதிரே அவிநாசியில் இருந்து திருப்பூர் செல்லும்  சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் கனரக வாகனம் முதல் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் வரை தினசரி பெரும்பா லானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர்  குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளம் தோண்டிய இடத்தில்  சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் செல்லும்போது  குழி இருப்பது தெரியவில்லை. இதனால் மழைக்காலங்க ளில் குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குழி இருப்பது  தெரியாமல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விட்டு விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு விடுகிறது.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, இந்த சாலையை  சீரமைக்குமாறு ஒன்றியகுழு கூட்டத்திலும் கோரிக்கை விடுத் துள்ளார். இருப்பினும் சாலையை சீரமைக்காததால் தினசரி  பகல் நேரத்திலும் இரவு நேரங்களிலும் அதிக விபத்து ஏற்படுகி றது. மேலும் பொதுமக்கள் இச்சாலையில் அச்சத்துடன் செல் லும் நிலை உள்ளது. உடனடியாக இந்த சாலையை  சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.