ஈரோடு, டிச.19- பவானிசாகர் வனப்பகு தியில் மருந்து விற்பனையா ளர்களுக்கு வனக்காணுலா திங்களன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருந்து விற்பனையா ளர்களுக்கு பாறு கழுகுக ளின் நன்மை குறித்தும், அதன் வாழ்வி டங்களை நேரடியாக பார்க்கும் வகையிலும் வனக்காணுலா நிகழ்ச்சி, அருளகம் அமைப்பு மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சார்பில் திங்களன்று நடைபெற் றது. விளாமுண்டி வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் புறப்பட்ட வனக் காணுலாவில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 54 மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பவானிசாகர், தெங்குமரஹாடா வனத்தை பார்வையிட் டதுடன், அங்கு சுற்றித்திரியும் பாறுகழுகு உள்ளிட்ட பல பறவைகளை தொலைநோக்கி (பைனாகுலர்) மூலம் பார்த்து ரசித்த னர். இதைத்தொடர்ந்து, அப்பகுதி பழங்குடி மாணவர்களுக்கு மருந்து விற்பனையா ளர்கள் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சத்தி யமங்கலம் புலிகள் காப்பக உயிரியலாளர் சக்திவேல், அருளகம் அமைப்பின் செயலர் பாரதிதாசன், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.