கோவை, ஜூலை 16- கோவையை அடுத்த வெள்ளகிணறு ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி சனி யன்று ஆதி அறக்கட்டளை திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது. பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி கலை பயின்று ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவின் கும்மி கலை அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆடினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி விஸ்வநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெ.சாந்தி, வி.கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ வள்ளி முருகன் கலை குழுவினரை பாராட்டி ஏஐடியுசி செய லாளர் சி.சிவசாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வள்ளி முருகன் கலைக் குழுவின் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சி ஆட்டக் கலைஞர்கள் ஆகியோரை பாராட்டி கௌரவிக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியினை சரண்யா தினேஷ் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், 14ஆவது வார்டு உறுப்பினர் சித்ரா தங்க வேல், 2ஆவது வார்டு உறுப்பினர் ஏ.புஷ்பமணி அருள் குமார் ஆகியோர் பங்கேற்றனர். அமைப்பாளர் கே.செல்வவிநாயக மூர்த்தி நன்றி கூறினார்.