திருப்பூர், ஜூன் 13 - ஊத்துக்குளி மாணவி கீர்த் தனா தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 ஏ (உதவி வனப் பாதுகாவலர்) பணியிடத்திற்கான தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தேர் வாகியுள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி ஆகியோ ரின் மகளான கு.கீர்த்தனா, தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகளுக்கு தொடர் முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலை யில் கடந்த ஆண்டு அக்டோப ரில் பிரதான எழுத்துத் தேர்வில் 564.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். அத்துடன் வியாழனன்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் 90 மதிப்பெண்களும் பெற் றார்.
இரு தேர்வுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 654.75 மதிப்பெண்களுடன் மாநி லத்திலேயே முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தமிழ்நாடு வனத்துறை பணியில் உதவி வனப்பாதுகாவலராகத் தேர்வு பெறுகி றார். மாநில அளவில் முதலிடம் பிடித்துத் தேர்வான கீர்த்தனாவுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.