districts

img

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க ஊத்துக்குளி வட்டப் பேரவை

திருப்பூர், ஜூலை 27- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்ட தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5 ஆம் பேரவை நடை பெற்றது. செவ்வாய்கிழமை காலை குன்னத்தூர் ராஜேஸ்வரி  கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணியம் தலைமையில், துணைத்தலைவர் ஆர்.ஆண்டமுத்து வரவேற்புரையுடன் துவங்கியது.  முருகேசன் துவக்கவுரை நிகழ்த்தினார். ஓய்வு பெற்ற பி எஸ் என் எல் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் பி.சின்னசாமி, ஒன்றிய அரசுகளின் ஓய்வூதியர்க ளுக்கு எதிரான செயல்பாடுகளை விளக்கிப் பேசினார்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன் னாள் பொதுச் செயலாளர் செ.நடேசன் ‘சுதந்திரம் பெற்று 75  ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், அரசியல் சாசனத் தில் இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள மதசார்பின்மை, ஜன நாயகம் சோசலிசம் குடியரசு என்ற விழுமியங்கள் நிறைவே றாமல் உள்ளதை’ சுட்டிக் காட்டினார். இந்த எட்டு ஆண்டுகால  ஆட்சியில் மதசார்பின்மை, ஜனநாயகம் சோசலிசம் குடியரசு  என்ற உரிய விழுமியங்கள் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன என்றார். செயலாளர் என்.பாஸ்கரன் முன்வைத்த வேலை அறிக்கை ஏற்கப்பட்டது. மேகவர்ணன் நிறைவுரை ஆற்றி னார். சம்பத்குமார் நன்றி கூறினார்.