மேட்டுப்பாளையம், ஆக.1- கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு கார ணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடை யேயான மலைரயில் சேவை ரத்து செய்யப் பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகை செல்ல நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் வியா ழனன்று காலை 7.10 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக ஹில் குரோ - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மரங்களும், கற்கள் மற்றும் சகதியோடு மண் ணும் சரிந்து தண்டவாள பாதையை மூடி யது. காலை 184 பயணிகளோடு மேட்டுப்பா ளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக் கம் போல் புறப்பட்ட மலை ரயில் கல்லார் ரயில் நிலையம் வரை சென்று விட்டு, மேற் கொண்டு பயணிக்க இயலாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டது. இருப்பு பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக வியாழனன்று நீலகிரி மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள் ளது. மலை ரயில் கடந்து செல்லும் இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றி தண்டவாளத்தை சீர மைக்கும் பணி ரயில்வே பணியாளர்களால் துவக்கப்பட்டது. சீரமைப்பு நடைபெறும் பகு தியில் மீண்டும் மழை தொடர்ந்தால் பணி கள் தாமதமாகலாம் என தெரிகிறது.