districts

img

டாஸ்மாக் ஊழியர்கள் பாரபட்ச பணியிட மாறுதல்

திருப்பூர், பிப்.5 -     திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணியிட மாறுதல் செய்வதில் பாரபட்சம் காட்டும் வகையில் ஆணை வெளி யிடப்பட்டுள்ளது. இதை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியு றுத்தி உள்ளது.    இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழ னன்று டாஸ்மாக் ஊழியர் சங்கங் களின் கூட்டமைப்பின் நிர்வாகி கள் அளித்த மனுவில் கூறப்பட்டி ருப்பதாவது: சில்லறை விற்பனை மதுபானக் கடை பணியாளர்கள் மாவட்டப் பணியிட மாறுதல் குறித்து பெறப்படும் மனுக்க ளின் மீது உண்மைத் தன்மை கண்ட றிந்து அதனை தலைமை அலுவல கத்திற்கு மாவட்ட மேலாளர் பரிந் துரைக்க வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர் பரிந்துரை யுடன் இதை அனுப்ப வேண்டும்.  மேலும்,கடைப் பணியாளர்கள் ஒரே மாவட்டத்திற்கு உள்ளாக பணியிட மாறுதல் கோரும்போது, அந்தந்த மாவட்ட மேலாளரின் பரிந்துரையுடன் முதுநிலை மண் டல மேலாளர் பணியிட மாறுதல் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள் ளது.     ஆனால் நடைமுறையில் மாவட்ட பணியிட மாறுதல் கோரும் மனுக்கள் மீது உண்மை தன்மையைக் கண்டறிவதில் பாகு பாடான அணுகுமுறை பின்பற்றப் படுகிறது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் முது நிலை மண்டல மேலாளர் மூலம் ஒரு சிலருக்கு மட்டும் சாதகமாக பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆணைகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.         திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் விற் பனை அடிப்படையில் போது மான பணியாளர்கள் இல்லாத  நிலையில் பணி நிரவல் செய்திட வேண்டும். ஆட்சியர் நேரடி நடவடிக்கை மூலம் இதைச் செய்ய வேண்டும்.  இம்மாவட்டத் தில் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக பெரும்பாலான கடை களில் கூடுதல் மேற்பார்வை யாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இத் தகைய கூடுதல் பணிகளை செய்து வரும் நிலையும் உள்ளது. எனவே கடை ஊழியர்களின் பணியிட மாறுதலில் உள்ள  நடைமுறை பிரச்சனைகளை பணி மூப்பு மற்றும் பொதுப் பணியிட மாறு தல் அடிப்படையில் முறைப்ப டுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ள னர்.    முன்னதாக, இந்த மனு வினை சிஐடியு டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் ஒய்.அன்பு, எம்.ஆறு முகம், பி.திருமூர்த்தி, செந்தில், எல்பிஎப் சங்கத்தின் கே.பெரிய அண்ணாமலை, சி.கணபதி, கண பதி, பாட்டாளி தொழிற்சங்கத்தின் எம்.வைத்தி கவுண்டர், சம்பத் உள் ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.