districts

img

சிஐடியு நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உடுமலை, ஏப்.17-  சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத் திய சமூக விரோதிகள் மீது  நடவ டிக்கை எடுக்க சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் வலியுறுத்தி உள் ளது.   உடுமலை நகர் பகுதியில் சிஐ டியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் நிர் வாகிகளில் ஒருவர் சையது இப்ரா ஹிம். ஆட்டோ ஓட்டுநரான இவரி டம் சனியன்று இரவு பிர்லா என்பவர்  தன்னை ஆட்டோவில் ஏற்றிச் செல் லுமாறு நிர்பந்தப்படுத்தி உள்ளார். இதற்கு இப்ராஹிம் மறுக்கவே, பிர்லா வலுக்கட்டாயமாக ஆட்டோ வில் ஏறி உட்கார்ந்து கொண்டு கீழே  இறங்க மறுத்துள்ளார். அப்போது இப்ராஹிம் அவரை கீழே இறக்கி விட முயற்சி செய்தபோது, பிர்லா தனது கையில் வைத்திருந்த கத் தியை கொண்டு இப்ராஹிமின் முது கிலும், மண்டையிலும் குத்தி காயப் படுத்தியுள்ளார். மேலும், ஆட்டோ  கண்ணாடியை உடைத்தும் சேதப்ப டுத்தியுள்ளார். இதனைத்தொ டர்ந்து, இப்ராஹிமின் அலறல் சத் தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்நிலையில், இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட அந்நபர் மீது உடனடியாக காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை காவல்துறையினருக்கு சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர்.